விராட் பந்து வீச்சாளர்களுக்கான கேப்டன் உமேஷ் யாதவ் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராட் பந்து வீச்சாளர்களுக்கான கேப்டன் உமேஷ் யாதவ் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார். பயிற்சிக்கிடையே அவர் அளித்த பேட்டி: கேப்டன் விராட் கோஹ்லி பந்து வீச்சாளர்களுடைய  கேப்டன்.

பந்துவீச்சாளர்கள் சுதந்திரமாக பந்து வீச அவர் ஊக்குவித்து வருகிறார். பந்துவீச்சாளர்களையே பீல்டிங் அமைத்துக்கொள்ள செல்வார்.

எங்களின்  வியூகம் பலன் அளிக்கவில்லை என்றால் மட்டுமே அவர் மாற்றுதிட்டத்தை கூறுவார். அனில்கும்ளே ஆலோசனைகள் பக்க பலமாக இருக்கிறது.

வலது கை பேஸ்ட்மேன்களுக்கு பந்துவீசும் போது ஸ்டெம்புக்கு மிக நெருக்கமாக வந்து பந்துவீச வேண்டும்என அவர் ஆலோசனை அளித்தார். ஆஸி. யில் வார்னர்  ரன்களை குவித்தபோதிலும், இந்தியாவில் அவ்வாறு விளையாட முடியாது.

அவரை விரைவில் ஆட்டம் இழக்கச்செய்வோம். அவரை வீழ்த்துவது தான் எங்களின் இலக்காக இருக்கும்.


.

மூலக்கதை