இடைவிடாது தொடரும் கலவரம்! - எட்டு கலவரக்காரர்கள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
இடைவிடாது தொடரும் கலவரம்!  எட்டு கலவரக்காரர்கள் கைது!!

நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் தியோ எனும் இளைஞனுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து கலவரக்காரர்கள் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளர். 
 
தியோ எனும் இளைஞனை Aulnay-sous-Bois பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்யும் போது மிக மோசமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், நாடு முழுவதும் தியோவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவது வாசகர்கள் அறிந்ததே. நேற்று வெள்ளிக்கிழமை இரவு Rouen மாவட்டத்தில் 150 இளைஞர்கள் கூடி, தியோவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். தொடர்ந்து அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளது. காவல்துறையினர் தெரிவிக்கும் போது, 'ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள். அதை சமாளிக்கவே நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்' என குறிப்பிட்டுள்ளார்கள். அதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
தாக்குதலை சமாளிக்க, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டு வீசியதாகவும், இரவு 7.30 மணிக்கு கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை