அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் திரில் வெற்றிபெற்ற இலங்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் திரில் வெற்றிபெற்ற இலங்கை!

 அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

 
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
 
இலங்கை அணி சார்பில் இருபதுக்கு-20 போட்டியில்  தனது முதலாவது அரைச்சதத்தை அசேல குணரத்ன பூர்த்திசெய்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இணைந்த முனவீர அபாரமாக துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
 
இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அசேல குணரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.
 
3 இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
 
 

மூலக்கதை