ரணிலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்
அவுஸ்ரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மென்பேர்ணில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டம் டீக்கின் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது போர்க்குற்றவாளிகளை கௌரவிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன்போது தமீழிழ தேசிய கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.