பஞ்சாப்பில் கோர விபத்து லாரி-வேன் மோதல்; பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சாப்பில் கோர விபத்து லாரிவேன் மோதல்; பேர் பரிதாப பலி

பெரோஸெபூர்- பஞ்சாப் மாநிலம், பாலசவுர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் சிங். இவரது குடும்பத்தை சேர்ந்த சுமார் 20 பேர் ஒரு நிகழ்ச்சிக்காக பதின்டா என்ற இடத்துக்கு நேற்று வேனில் சென்றனர்.

பேகாக் பகுதியில் வந்த போது, வேன் மீது மணல் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில், வேன் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

வேனில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்து அலறினர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மக்களும், போலீசாரும் சேர்ந்து வேனில் சிக்கி கொண்டவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் 11 பேர் அதே இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை