ஆஸி., வீரர்கள் கடுமையாக போராட வேண்டும் - மாஜி கேப்டன் கிளார்க் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸி., வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்  மாஜி கேப்டன் கிளார்க் பேட்டி

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல்கிளார்க் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விராட் கோஹ்லி அண்ட் கோவை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராட வேண்டியதிருக்கும். அதற்கு வீரர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

பந்து வீச்சாளர்களான மிச்செல் ஸ்டார்க், ஜான்ஹேஸ்ல்வுட் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்புகிறேன். இந்திய அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.

ஆஸி. பந்து வீச்சாளர்கள் ரிசர்வ் ஸ்விங் முறையில் பந்து வீசினால் எளிதாக விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸி. வீரர்கள் கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.

தேர்வுக்குழுவினர் சிறந்த வீரர்களை தேர்வு செய்து அனுப்புகின்றனர். உலகம் முழுவதும் விளையாடி அதிக வெற்றியை பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரிலும் சாதிப்பார்கள்.



.

மூலக்கதை