சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு - காங்கிரஸ் வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு  காங்கிரஸ் வரவேற்பு

புதுடெல்லி- சொத்துக்குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஊழலுக்கு எதிராக வழங்கப்பட்ட சிறப்புவாய்ந்த தீர்ப்பு என காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஊழலுக்கு எதிராக வழங்கப்பட்ட மிக துல்லியமான தீர்ப்பு இது.

பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடுவது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஊழல் செய்யும் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.

தமிழகத்தில் நிலையான அரசு அமைய வேண்டும். எனவே, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமதம் செய்தால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

.

மூலக்கதை