பீகாரில் கோர விபத்து ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகாரில் கோர விபத்து ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் பலி

கதிகார்- பீகாரில் இன்று காலை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பீகார் மாநிலம், கதிகார் நகரை நோக்கி இன்று காலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆடோவில் 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

குர்செலா தானே என்ற இடத்தில்  வளைவில் திரும்பியபோது, அங்குள்ள பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள்,  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை