ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை - பாடலாசிரியர் தாமரை பரபரப்பு கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை  பாடலாசிரியர் தாமரை பரபரப்பு கருத்து

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை கவுதமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதினார்.

அதில் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை  பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.



ஆனால் பிரதமர் தரப்பிலிருந்து பதில் எதுவும் வராத நிலையில் மீண்டும் ஒரு கடிதம் எழுதி அதில் தனது கோரிக்கைக்கு பதில் என்ன என்று கேட்டிருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதுகுறித்து பல்வேறு நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்திருந்தனர். மின்னலே படத்தில் வசீகரா பாடல் எழுதியதுடன் பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதியுள்ள பாடலாசிரியர் தாமரை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ‘அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



.

மூலக்கதை