எமி செல்போனில் ஊடுருவி பர்சனல் போட்டோ - திருட்டு சைபர் கிரைமில் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எமி செல்போனில் ஊடுருவி பர்சனல் போட்டோ  திருட்டு சைபர் கிரைமில் புகார்

தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார் எமி ஜாக்ஸன். லண்டன் நடிகையான இவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு பறந்துவிடுகிறார்.

அங்கும் ஆங்கில நாடகங்களில் நடிக்கிறார். இதனால் பல்வேறு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய தள பக்கங்களில் தனது கவர்ச்சி படங்கள் மற்றும் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தமிழில் தற்போது ரஜினியுடன் 2. 0 படத்தில் நடிக்கிறார்.

இதன்பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக சமீபத்தில் சென்னை வந்தார். முன்னதாக அவர் லண்டனிலிருந்து மும்பை வந்தார்.

அங்கிருந்தபோது அவரது செல்போனில் மர்ம நபர்கள் ஊடுருவி அதிலிருந்த எமியின் பர்சனல் புகைப்படங்களை திருடி அதனை இணைய தளத்தில் லீக் செய்தனர். அதைக்கண்டு ஷாக் ஆனார் எமி.

இதுகுறித்து அவர் கூறும்போது,’இப்படியொரு சம்பவம் நடந்ததையறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது சாதாரண விஷயமல்ல மிகவும் சீரியஸானது.

இதுகுறித்து லண்டன் சைபர் கிரைமில் புகார் செய்ய உள்ளேன். அதன் மூலம் என் செல்போனில் ஊடுருவிய மர்ம நபர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள்.

சைபர் பாதுகாப்பு தற்போது மிக முக்கிய தேவையாக இருக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை