அடுத்து எங்கள் குறி இந்த அணி மீது தான்!

PARIS TAMIL  PARIS TAMIL
அடுத்து எங்கள் குறி இந்த அணி மீது தான்!

 அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான வரவிருக்கும் தொடரை நோக்கி தான் இந்திய அணி வீரர்களின் மனம் தற்போது இருக்கிறது என இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி கூறியுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், இந்த 2016-2017 சீசன் தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-0 வெற்றி தான் சிறந்தது என கருதுகிறோம்.
 
இதே போல வரவிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம்.
 
இதனை நோக்கி தான் இந்திய அணி வீரர்களின் மனநிலை தற்போது இருக்கிறது.
 
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது எனவும், இதனால் ஓட்டங்கள் அதிகரித்து எனவும் மொத்தத்தில் அந்த தொடர் எல்லா விதத்திலும் சிறப்பாக அமைந்தது எனவும் கோஹ்லி கூறியுள்ளார்.

மூலக்கதை