விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் - இர்பான் பதான் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்  இர்பான் பதான் நம்பிக்கை

நாக்பூர்: பரோடா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான்,நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்காக  விளையாடிய முக்கிய தருணங்களை நினைவு கூர்ந்தார். அப்போது, பாகிஸ்தான் ரசிகை ஒருவர் தன்னிடம் ஒருமுறை இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான் இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக நினைப்பதாக பதில் அளித்தேன் என்றார். மேலும் இந்திய அணிக்காக ஆடி நீண்டகாலமாகி விட்டபோதும் விரைவில் இந்திய சீருடையை அணிவேன் என நம்புகிறேன் என்றார்.

32 வயதான இர்பான் பதான் கடைசியாக 2012 ம் ஆண்டு இந்திய அணிக்காக டி. 20 போட்டியில் ஆடினார். மோசமான பார்ம் காரணமாக அதன்பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒன்டே மற்றும் 5 டி. 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.   கடந்த 2006ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் சாதனையும் பதான் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை