தீர்ப்பு வேறு தீர்வு வேறு: கமல் மீண்டும் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீர்ப்பு வேறு தீர்வு வேறு: கமல் மீண்டும் கருத்து

தமிழக அரசியல் நிலவரம், முதல்வர் பதவியை யார் பிடிப்பது என்ற போட்டி ஓ. பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு இடையே நடந்து வரும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்.

அது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அவர் தெரிவித்துள்ள கருத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளதாக ரசிகர்கள் ரீடுவிட் செய்து வருகின்றனர்.

கமல் கூறியது: நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு, தீர்வு வேறு.

நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்’ என குறிப்பிட்டுள்ளார்.

இன்று சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையொட்டி இந்த கருத்தை நேற்று கமல் வெளியிட்டிருந்தார்.


.

மூலக்கதை