மீண்டும் கவர்ச்சிக்கு மாறுகிறார் வித்யாபாலன்
சேலையை இழுத்துபோர்த்திக்கொண்டு நடித்துக்கொண்டிருந்தார் வித்யாபாலன். யாரும் கண்டுகொள்ளவில்லை.
நொந்துபோனவர் கவர்ச்சிக்கு மாற முடிவு செய்தார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து, வித்யாவா இப்படி கவர்ச்சியாக நடித்திருக்கிறார் என வாய்பிளக்க வைத்தார்.
இப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. பிறகு திருமணம், குடும்பம் என்று மூழ்கினார்.
சேலை கம்பெனி ஒன்றிற்கு ஒரு வருட ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த விழாவுக்கு சென்றாலும் சேலை அணிவது என்ற கண்டிஷனை ஏற்று எப்போதும் சேலையுடன் தோன்றினார். இது அவரது கவர்ச்சி இமேஜை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்றது.
வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் டர்ட்டி பிக்சர் அளவுக்கு பெயரை பெற்றுத் தரவில்லை.
இதனால் தனது முடிவை மாற்றினார். ‘பேகம் ஜான்’ புதிய படத்தில் விபசார விடுதி நடத்தும் பெண்ணாக நடிக்கிறார்.
இதில் மீண்டும் கவர்ச்சி அவதாரத்துக்கு மாறியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது,’விபசாரம் செய்பவர்கள் கவர்ச்சியாக இருப்பார்கள்.
அந்த விடுதியை நடத்துபவரும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக நீங்கள் (வித்யாபாலன்) கவர்ச்சியாக தோன்றுகிறீர்களா என்கிறார்கள்.
அதுபற்றி இப்போது கேட்காதீர்கள்.
தற்போதைக்கு அது சஸ்பென்ஸ்’ என்றார்.