கொழும்பில் பதற்றம்! மாணவர்கள் மீது பொலிஸார் நீர் தாக்குதல்

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பில் பதற்றம்! மாணவர்கள் மீது பொலிஸார் நீர் தாக்குதல்

 சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக இன்று காலை பல்கலைக்கழக மாணவர்களினால் கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 
போராட்டத்தை முன்னெடுத்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள்  மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கு பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
 
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றபோதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறித்த மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் கலகத்தடுப்பு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
இதன் போது பொலிஸார் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
 

மூலக்கதை