பரிஸ் விமான நிலையத்தில் பாரிய பேருந்து விபத்து!! போக்குவரத்துக்கள் முடக்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் விமான நிலையத்தில் பாரிய பேருந்து விபத்து!! போக்குவரத்துக்கள் முடக்கம்!!

பரிசின் விமானநிலையமான சார்ள்-து-கோல் அருகில் உள்ள, Roissy-en-France இல் உள்ள A1 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து ஒன்று இன்று காலை 9h00 மணிக்கு நடந்துள்ளது.
 
பிரித்தானியர்கள், சீனர்கள், மற்றும் பிரெஞ்சு மக்களையும் ஏற்றிக்கொண்டு லில் திசையில், Megabus பேருந்த சென்று கொண்டிருந்துள்ளது. A1 நெடுஞ்சாலையின் குகைப்குதிக்குள் பேருந்து சென்று கொண்டிருந்த போது, இந்தப் பாதையை ஊடறுத்துத் திடிரென திரும்பிய சிற்றுந்த ஒன்று, பாரிய விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தச் சிற்றந்தைத் தவிர்ப்பதற்காகப் பேருந்தைத் திருப்பிய சாரதி, அங்கிருந்த தூணுடன் மிகவும் வேகமாகப் பேருந்தை மோதியுள்ளார்.
இதில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் ஏழுபோர் காயமடைந்துள்ளனர்.
 
சாரதியும் மிகுதி 21 பயணிகளும் காயமின்றித் தப்பித்துள்ளனர். இவர்கள் உடனடியாக Roissy-en-France உள்ளக விளையாட்டுத் திடலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து province நோக்கிச் செல்லும் திசையில், A1நெடுஞ்சாலை இரு திசைகளிலும் தடைப்பட்டுப் போக்குவரதத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
 

மூலக்கதை