சினிமாவில் ஆர்வம் காட்டும் ஆனந்தி
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகை ஆனவர் ஆனந்தி. அதன் பறகு மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடினார். வாலு, மீகாமன் படங்களில் நடித்தார். இவரின் நடன திறமையை பார்த்து பாலா தாரை தப்பட்டையில் அறிமுகப்படுத்தினார். வரலட்சுமியோடு செம ஆட்டம் போட்டார் ஆனந்தி. சமீபத்தில் வெளி வந்த பறந்து செல்லவா படத்தில் காமெடியன் சதீஷ் ஜோடியாக நடித்தார். படத்தில் மது அருந்தும் காட்சியிலும், கிளாமர் காட்சியிலும் துணிச்சலுடன் நடித்தார். தற்போது சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
"ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றில்லை. நடிப்பதற்கு பேஸ் இருக்கிற கேரக்டராக இருக்கணும். வில்லியாக நடிக்க முடியும், ஆனால் காமெடி வராதுன்னு நினைக்கிறேன். சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் தொடர்ந்து நடிப்பேன்" என்கிறார் ஆனந்தி.