500 கிலோ கஞ்சா - நெடுஞ்சாலையில் சுங்கத்துறையினர் வேட்டை!!

PARIS TAMIL  PARIS TAMIL
500 கிலோ கஞ்சா  நெடுஞ்சாலையில் சுங்கத்துறையினர் வேட்டை!!

Poitiers  இனைச் சேர்ந்த சுங்கத்துறையினர் (Les douaniers) மூன்று மில்லியன் யூரோக்கள் பெறுமதியான கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றி உள்ளனர்.  நெடுஞ்சாலையில் பெரும் துரத்தல் நடவடிக்கையில் ஈடுட்ட சுங்கத்துறையினர், இறுதியாக இந்தப் போதைப்பொருட் களஞ்சியத்தை கைப்பற்றி உள்ளனர்.
 
A10 நெடுஞ்சாலையின் Sainte-Maure-de-Touraine  வெளியெறும் பகுதியில், சோதனைக்காகப் போடப்பட்டிருந்த சுங்கத்துறையினரின் தடுப்பை உடைத்தெறிந்த விட்டு ஓடிய,  இந்த வாகனத்தைத் துரத்திய சுங்கத்துறையினர் பத்துக் கிலோமீற்றர்கள் தூரத்தில் வாகனத்தை மடக்கி உள்ளனர்.
 
 
வாகனத்தின் பின் இருக்கையிலும்,  பொதிப்பெட்டியிலும், பல சிறு பொதிகளாக, இந்தக் கஞ்சாப் போதைப்பெருள் மறைக்கப்பட்டிருந்துள்ளது.
 

மூலக்கதை