குடிநீர் தட்டுப்பாடா? புகார் அளிக்கலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடிநீர் தட்டுப்பாடா? புகார் அளிக்கலாம்

திருவள்ளூர் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அளவு, சராசரி அளவை விட குறைவாக பெய்ததால், வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக, குடிநீர் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

கீழ்காணும் எண்ணுக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் புகார்கள் அளிக்கலாம். செல்போன் எண்- 7548846801.

வாட்ஸ் ஆப் எண்- 7548846803. லேண்ட் லைன்-
044-27665248.

கட்டணம் இல்லா தொலைபேசி-1077

.

மூலக்கதை