துப்பாக்கி முனையில் - 15 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

PARIS TAMIL  PARIS TAMIL
துப்பாக்கி முனையில்  15 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

நேற்று புதன்கிழமை துப்பாக்கி முனையில் 15 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
 
Alpes-Maritimes இன் Cannes நகரில் உள்ள ஆடம்பர நகைக்கடையான Harry Winston நகைக்கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிஸ்டர் ரக கைத்துப்பாக்கி ஒன்றுடன், நேற்று புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தனி ஒரு நபராக காட்சியறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் முதலில் வாடிக்கையாளர் போல் நடித்துள்ளார். பின்னர் நகைகளை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது, துப்பாக்கியை காட்டி மிரட்டி, கிரைனைட் குண்டு ஒன்றையும் வெளியில் எடுத்துள்ளார். பின்னர் நகைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு 15 மில்லியன் யூரோக்கள் என்றும், நகைகள் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 17.5 மில்லியன் மதிப்புள்ள நகைகள் Cannes பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை