சூர்யா கைவிட்ட பட புரமோஷன் திட்டம் - இளைஞர்களுக்கு தலைவணங்கும் நயன்தாரா

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூர்யா கைவிட்ட பட புரமோஷன் திட்டம்  இளைஞர்களுக்கு தலைவணங்கும் நயன்தாரா

ஜல்லிக்கட்டுக்காக போராட்டக்களத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் மாணவர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டை மீட்டெடுப்போம் என்று ஏற்கனவே நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நடித்துள்ள சி3 படம் வரும் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் புரமோஷனுக்காக அவர் மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது அந்த பயண திட்டத்தை ரத்து செய்துவிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து நடிகை நயன்தாரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறும்போது, ‘இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது.

எனக்கு ஒரு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களுக்கு நான் உறுதுணையாக நிற்பேன்.

இளைஞர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்துக்கும் தலை வணங்குகிறேன்.

நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்’ என
குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை