ஆஸ்திரேலிய ஓபன் 3வது சுற்றில் கோண்டா கைலே எட்மண்டு வெளியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய ஓபன் 3வது சுற்றில் கோண்டா கைலே எட்மண்டு வெளியேற்றம்

மெல்போர்ன்: 2017ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நகரில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. 4வது நாளான இன்று காலை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் உலகின் 9ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் ஜோஹன்னா கோண்டா-ஜப்பானின் நயோமி ஓசாகா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோஹன்னா கோண்டா, 3ம் சுற்றுக்கு முன்னேறினார்.

3ம் சுற்றில் அவர் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி அல்லது குரோஷியாவின் டானா வெகிக்கை எதிர்கொள்ளவுள்ளார்.    ஆனால் இன்று காலை நடந்த மற்றொரு போட்டியில், உலகின் 46ம் நிலை வீரரான பிரிட்டனின் கைலே எட்மண்டு, ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில், 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில், 30ம் நிலை வீரரான ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவால் வீழ்த்தப்பட்டார். இதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

.

மூலக்கதை