12 வருடங்களுக்கு பின் சிறிலங்காவில் மலர்ந்த அதிசய பூ!

PARIS TAMIL  PARIS TAMIL
12 வருடங்களுக்கு பின் சிறிலங்காவில் மலர்ந்த அதிசய பூ!

 தலவாக்கலை - ஹேமசந்திரா மாவத்தை பகுதியில் இரவு 12 மணிக்கு மலரும் பூ அதிகாலை சூரியன் வெளிச்சத்திற்கு முன்பாக மறைந்து விடும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

 
கடும்புல் பூஞ்செடியில் 12 வருடங்களுக்கு பின் இந்த பூ நேற்று மலர்ந்துள்ளது.
 
இப்பகுதியில் வசிக்கும் டி.மீதுபுல என்பவரின் வீட்டின் முன்புறத்தில் வளர்க்கப்படும் கடும்புல் பூஞ்செடியிலேயே இந்த பூ மலர்ந்துள்ளது.
 
இப்பூ இரவு 12 மணியளவில் மலர்ந்து சூரியன் உதிப்பதிற்கு முன்பதாக மறைந்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்த அதிசயமான மலரை பார்ப்பதற்காக குறித்த பிரதேசத்தில் உள்ள அதிகமானவர்கள் அந்த வீட்டுக்கு சென்றவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வீட்டின் உறவினர்கள் மற்றும் சிலர் இரவுவேளை வரை தங்கியிருந்து இந்த அதிசயத்தினை பார்க்க ஆவலுடன் இருக்கின்றமையும் குறிப்பிடதக்கது.
 

மூலக்கதை