நடுவழியில் தீப்பிடித்த பேருந்து! - முற்றாக எரிந்து சாம்பல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
நடுவழியில் தீப்பிடித்த பேருந்து!  முற்றாக எரிந்து சாம்பல்!!

பேருந்து ஒன்று பரிசுக்கு அருகே நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 
 
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 9.40 மணிக்கு  A1 மற்றும் A3 சாலை முனையில் வைத்து தீப்பிடித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பேருந்து சாரதி மட்டும் பேருந்தில் இருந்ததாகவும், அவர் பேருந்தை விட்டு அவசரமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாள்-து-கோல் விமானநிலையத்துக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தே தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு துறையினரால் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. தீப்பற்றியதுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதை தொடர்ந்து நண்பகல் வரை போக்குவரத்து தடை தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலக்கதை