தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் திரண்டு போராட்டம்

தினகரன்  தினகரன்

யாழ்ப்பாணம்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று இலங்கை வரை ஆதரவு நீண்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அளிக்குமாறு உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை கேட்டுகொண்டதால் இப்போராட்டம் மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அலங்கா \'நல்லூர்\' ஆடும் வரை ஈழ \'நல்லூர்\' அடங்காது என்றும் தமிழனின் தனித்துவத்தை தடுக்காதே என்றும் தலைகுனியும் நிலையில் இனி தமிழன் இல்லை என்றும் ஈழர்கள் முழக்கங்களை எழுப்பினர். பண்பாட்டை சிதைக்காதே என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை அவர்கள் தாங்கி நின்றனர்.

மூலக்கதை