ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குவிகிறது ; சிங்கப்பூரில் தமிழர்கள் போராட்டம்

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குவிகிறது ; சிங்கப்பூரில் தமிழர்கள் போராட்டம்

சிங்கப்பூர்: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், என பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட துவங்கியுள்ளனர்.

சிங்கப்பூரில் இன்று அனைத்து தமிழர்களும் ஹாங்க் லிம் பார்க் பகுதியில் அனைவரும் கூடுமாறு வாட்ஸ்அப் மூலம் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இரவு 7 மணிக்கு அனைவரும் கூடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பாமல் அமைதியாக போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளையும் ஜல்லிக்கட்டையும் காப்பாற்ற நடக்கும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடக்கும் இந்த போராட்டத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். சிங்கப்பூர் குடிமகன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். போராட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தண்ணீர் மற்றும் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் வாசகர்களும்.,


சிங்கப்பூரில் வாழும் நமது தினமலர் வாசகர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு தினமலர் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

மூலக்கதை