வெளிநாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு பெருகும் ஆதரவு : ஆஸ்திரேலியாவில் விடுப்புடன் கூடிய சம்பளம்

தினகரன்  தினகரன்

துபாய்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா, துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விடிய விடிய இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு, கொட்டும் பனியில் துவங்கிய மாணவர்கள் போராட்டம், நேற்று கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்தது. இதேபோல நெல்லை, சேலம், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்காஅமெரிக்காவில் 25 இடங்களில் தமிழ் அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். வட அமெரிக்காவின் ஜெயின்லூயிஸ் நகரத்தில் தமிழ் இளைஞர்கள் பறையடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் தமிழ் இளைஞர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி வெளிநாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைஇலங்கை யாழ்பாணத்தில் இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அலங்கா \'நல்லூர்\' ஆடும் வரை ஈழ \'நல்லூர்\' அடங்காது என்றும், தமிழனத்தின் தனித்துவத்தை தடுக்காதே என்றும் தலைகுனியும் நிலையில் தமிழன் இல்லை என்றும் இளைஞர்கள் முழக்கமிட்டனர்.

மூலக்கதை