மட்டக்களப்பில் மர்மபொருள் - பீதியில் மக்கள்!
மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்துள்ள பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொருள் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் டெங்கு உருவாகும் வகையிலும் மாசடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
இந்த காணி உரிமையாளர்கள் எந்தவித கவனம் செலுத்தாமல் உள்ளமையால் இந்த மர்ம புதையல் தொடர்பாக சுகாதார பரிசோதகர் கவனத்துக்கு மக்கள் கொண்டுச் சென்றுள்ளனர்.
குறித்த காணியில் புதைக்கப்பட்டுள்ள மர்மபொருள்ள என்ன என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கு கூடி நின்றுள்ளதோடு சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.