மனுவல் வால்சின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளைஞன்!! (காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
மனுவல் வால்சின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளைஞன்!! (காணொளி)

மனுவல் வால்ஸ் பிரேத்தோன் மாநிலத்தில் உள்ள, Lamballe (Côtes-d'Armor) நகரத்திற்கு, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்த வேளை, ஒரு பதினெட்டு வயது இளைஞன், மனுவல் வால்சின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
 
 

 
'இது பிரெத்தோன்' எனக் கத்தியபடி, 18 வயதுடைய நொலோன் (Nolan) நடவடிக்கையில் இறங்கியுள்ளார். "மக்களை மனுவல் வால்ஸ் நடாத்தும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை" என நொலோன், தன்னைக் கைது செய்த காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
 
 
இந்த இளைஞன் இன்று புதன்கிழமை, நீதிமன்னறத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு, மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட (sursis) சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுப்பணியில், 105 மணித்தியாலங்கள் ஊதியமின்றி வேலை செய்து கொடுக்கவேண்டும் என்றும் Saint-Brieuc  குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 
 

மூலக்கதை