யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! பிரபல்யம் அடையும் மண்டைதீவு!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான முன்னாயத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு கள ஆய்வுகளை மேற்கொண்டது.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தனர்.
அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் கிரிக்கெட் அரங்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.