தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த முடிவு

PARIS TAMIL  PARIS TAMIL
தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த முடிவு

ஜல்லிக்கட்டு குறித்து நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்த முதல்வர் முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை கைவிடுமாறு மாணர்களை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் போராட்டம் தமிழர்களின் உணர்வுகளை பிரதிப்பலிக்கின்றன. ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.
 

மூலக்கதை