Essonne - A10 சாலையில் 220 கி.மி வேகத்தில் மகிழுந்து! - சாரதி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
Essonne  A10 சாலையில் 220 கி.மி வேகத்தில் மகிழுந்து!  சாரதி கைது!!

ஆபத்தான வேகத்தில் மகிழுந்தை செலுத்திய குற்றத்துக்காக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 220 கிலோ மீட்டர் வேகத்தில் மகிழுந்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த திங்கட்கிழமை இரவு, Essonne மாவட்டத்தின் A10 நெடுஞ்சாலையில், 23 இளைஞன் மகிழுந்தை 220 KMph வேகத்தில் செலுத்தியுள்ளார். 110 கிலோமீட்டர் வேகம் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தை விடவும், இரண்டு மடங்கு வேகத்தில் செலுத்தியுள்ளார். குறித்த சாரதி ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டு, சாரதி அனுமதி பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Mercedes-Class C வகை மகிழுந்தைச் செலுத்தியுள்ளார். மேலும் குறித்த மகிழுந்து வாடகைக்கு எடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சாரதி திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் Briis-sous-Forges பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Drôme மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞரின் சாரதி அனுமதி பத்திரம் பறிக்கப்பட்டு, உடனடியாக கைதும் செய்யப்பட்டுள்ளார். 
 

மூலக்கதை