ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இதனிடையில் எங்களுக்கும் தமிழ் கலாசாரம் மீது பற்று உள்ளது என உறுதியாக நிரூபிக்கும் வகையில் லண்டன் வாழ் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு திரண்ட பலர் அமைதியான முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், தடை அதை உடை, மோதாதே மோதாதே தமிழகத்துடன் மோதாதே போன்ற கோஷங்களை எழுப்பியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் பீட்டா அமைப்பை எதிர்த்தும் லண்டன் வாழ் தமிழர்கள் முழக்கவிட்டார்கள். தமிழர்கள் ஒன்று கூடி நடத்திய போராட்டத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.இது போல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மூலக்கதை