மீண்டும் களமிறங்கும் சங்கக்காரா, டில்ஷான்

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் களமிறங்கும் சங்கக்காரா, டில்ஷான்

 ஹொங்காங்கில் நடைபெறும் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான திலகரட்ன டில்ஷான் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளார்.

 
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் விளையாடுவதற்காக இன்று ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளனர்.
 
குறித்த போட்டியில் டில்ஷான் கயிடாக் அணிக்காகவும் சங்கக்காரா கேலக்ஸி கிளாடியேட்டர் ளாண்டூ அணிக்காகவும் விளையாடவுள்ளார்.
 
இது தொடர்பாக டில்ஷான் குறிப்பிடுகையில், 'கயிடாக் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியடைவதோடு ஹொங்காங்கில் இளம் ஹொங்காங் வீரர்களோடு விளையாடுவதற்கு எதிர்பார்ப்போடு இருப்பதாக' தெரிவித்துள்ளார்.
 
சங்கக்காரா கூறுகையில், கேலக்ஸி கிளாடியேட்டர் ளாண்டூ அணிக்காக விளையாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹொங்காங் இளம் மற்றும் வளர்ந்து வரும் திறமையான வீரர்களுடன் விளையாட எதிர்பார்ப்போடு இருப்பதோடு அனைத்து கிரிகெட் ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் , இந்த போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சைட் ஹப்ரிடி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மூலக்கதை