அலங்காநல்லூரில் மையம் கொண்ட ஜல்லிக்கட்டு புயல் யாழ்ப்பாணம் நல்லூரையும் தாக்கியது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அலங்காநல்லூரில் மையம் கொண்ட ஜல்லிக்கட்டு புயல் யாழ்ப்பாணம் நல்லூரையும் தாக்கியது!

யாழ்ப்பாணம்: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்து மாணவர்கள், இளைஞர்களின் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் போராட்டம் வெடிக்கிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை தமிழகத்துக்கு ஆதரவாக மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழீழத் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு தருகின்றனர்.

தற்போது ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான போராட்டத்தில் தமிழகத்து இளைஞர்கள் வீதிக்கு வந்துள்ளனர். தமிழகத்தின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் முன்பாக இன்று மாலை போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை