யுவராஜ்சிங் மறுபிரவேசம் என்னை தூண்டுகிறது - ஹர்பஜன்சிங் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
யுவராஜ்சிங் மறுபிரவேசம் என்னை தூண்டுகிறது  ஹர்பஜன்சிங் பேட்டி

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 3 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், யுவராஜ் மறுபிரவேசம் தன்னையும் தூண்டுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

35 வயதான அவர் அளித்துள்ள பேட்டி: கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜலந்தரில் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன்.

அடுத்து வரும் விஜய் ஹசாரே, சையத்  முஷ்டாக் அலி, ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி உள்ளேன்.  

யுவராஜ் மறுபிரவேசம் என்னை தூண்டுகிறது.

மீண்டும் நான் இந்திய அணிக்கு திரும்புவேன். ஜூனில் நடைபெறும் சாம்பியன் டிராபியில் பங்கேற்க கவனம் செலுத்துகிறேன்.

ஐபிஎல்லில் கடினமாக உழைக்கும் பட்சத்தில் அதற்காக வாய்ப்பு கிடைக்கும். அடுத்த 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும்.

அதன்பின்னர் அரசியலில் ஈடுபடுவது பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது. எனது முழு கவனமும் மீண்டும் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது தான்.


.

மூலக்கதை