விருது தராமல் ஓரம்கட்டுகிறார்கள் - டாப்ஸி புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விருது தராமல் ஓரம்கட்டுகிறார்கள்  டாப்ஸி புகார்

நடிகை டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அமிதாப்பச்சனுடன் அவர் நடித்த பிங்க் இந்தி படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றதுடன் டாப்ஸியின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பாலிவுட்டில் பிரபல விழாக்களில் விருது வழங்கப்பட்டது. அதில் எதிலும் டாப்ஸிக்கு விருது தரப்படவில்லை.

இது அவரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து டாப்ஸி கூறும்போது, ‘எந்தவொரு விருதுக்கும் எனது பெயர் அங்கீகரிக்கப்படவில்லை.

பல்வேறு விருது விழாக்கள் நடந்தன. அதில் ஒரேயொரு விழாவில் பிங்க் படம் பட்டியலில் இடம்பிடித்திருந்தது.

ஆனால் விருது எதுவும் வழங்கப்படவில்லை. விருது தராமல் நான் ஓரங்கட்டப்பட்டாலும் பிங்க் படத்தில் எனது கதாபாத்திரம் பலரது இதயத்தை தொட்டது மறுக்க முடியாது.

எத்தனை விருதுகள் கொடுத்தாலும் மக்கள் தந்த அங்கீகாரத்துக்கு ஈடுகிடையாது. பிங்க் படம் அதை நிரூபித்திருக்கிறது.

விருது தராதது ஒரு விஷயம் அல்ல.

மக்களின் பாராட்டு என்னை தொடர்ந்து கடுமையாக உழைக்க செய்திருக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை