ஜல்லிக்கட்டு தடையை நீக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகர் விஷால் கடிதம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு தடையை நீக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகர் விஷால் கடிதம்


சென்னை,

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி நடிகர் சங்கத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால்  ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன். என கூறி இருந்தார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்க நீங்கள் (பிரதமர்) நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நேரில் பேச எனக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த கடிதம் பிரதமர் அலுவலகத்தின் பேக்ஸ், பதிவு தபால், இ-மெயில் ஆகியவற்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை