குண்டு மழையில் 100க்கும் மேற்பட்ட அகதிகள் பரிதாபமாக பலி!

PARIS TAMIL  PARIS TAMIL
குண்டு மழையில் 100க்கும் மேற்பட்ட அகதிகள் பரிதாபமாக பலி!

 நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாமில் அந்நாட்டு ராணுவம் தவறுதலாக குண்டு வீசியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

 
நைஜீரியா நாட்டு ராணுவம் அந்நாட்டில் உள்ள போகோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் வான் வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதன்படி, அந்நாட்டு விமானப்படை இன்று ஜெட் ஏவுகணை மூலம் குண்டுவீச முற்பட்ட போது, தவறுதலாக அகதிகள் முகாம் ஒன்றில் அந்த குண்டு விழுந்துள்ளது.
 
இதில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட செஞ்சிலுவை அமைப்பினரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேலும் படுகாயமடைந்த 120 நபர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்தத் தகவலை அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நைஜீரிய ராணுவத்தின் கமாண்டரும் தவறுதலாக குண்டுவீசப்பட்டதை உறுதிசெய்துள்ளார்.
 

மூலக்கதை