ஐவருக்கு கத்திக்குத்து! - ஆயுததாரி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐவருக்கு கத்திக்குத்து!  ஆயுததாரி கைது!!

நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் ஐந்து நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, Isère மாவட்டத்தில் உள்ள Tignieu-Jameyzieu பகுதியில் உள்ள மெக்.டொனால்ட் உணவகத்துக்கு அருகே இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த 20 இளைஞன், விடுதி ஒன்றில் இருந்து இருவரை தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறி மெக்.டொனால்ட் உணவகத்துக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மேலும் நால்வரை கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான ஐவரில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதியில் அவசரமாக 30 ஜோந்தாமினர்கள் வரை குவிக்கப்பட்டு, குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
தாக்குதலுக்கு இலக்கான நபர்களுக்கும் தாக்குதல் நடத்திய நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃ

மூலக்கதை