ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லண்டன், மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வெளிநாடுகளிலும் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது.  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழர்கள் நள்ளிரவில் இந்தியா தூதரகம் அருகே திரண்டனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளுடன் அவர்கள் முழக்கமிட்டனர். இதேபோல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் திரண்ட தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான எழுச்சி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடி வரும் இளைஞர்களையிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி போராட்ட களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

மூலக்கதை