ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்று திரளும் மாணவர் சக்தி

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்று திரளும் மாணவர் சக்தி

சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

வகுப்புக்கள் புறக்கணிப்பு :


சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக சட்ட, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
subtitle@ மனிதசங்கிலி :


சென்னை, மறைமலைஅடிகள் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை