யாழ் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள்! வைத்தியர் மீண்டும் சாதனை

PARIS TAMIL  PARIS TAMIL
யாழ் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள்! வைத்தியர் மீண்டும் சாதனை

 யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

 
இதில் இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஊர்காவற்துறை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே இந்த மூன்று குழந்தையும் பிறந்துள்ளது.
 
தாய்கான சிகிச்சையை மகப்பேற்று பெண்ணியல் நிபுணர் கே. சுரேஸ்குமார் மேற்கொண்டுள்ளார்.
 
மூன்று குழந்தைகளும் நேற்றிரவு 1.28 மணியளவில் பிறந்துள்ளன.
 
இரு ஆண்குழந்தையும் ஒன்று பெண்குழந்தையுமாக பிறந்துள்ளன. நள்ளிரவு 11.27 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளும், 11.28 மணியளவில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
 
ஒரு கிலோவும் 900 கிராம் மற்றைய குழந்தை ஒரு கிலோ 560 கிராம் அடுத்த குழந்தை இரண்டு கிலோவும் 100 கிராம் எடையிலும் பிறந்துள்ளன.
 
மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்று ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சத்திர சிகிச்சையினை குறித்த வைத்திய நிபுணரே மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை