லோதா கமிட்டி விவகாரம் 3 மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லோதா கமிட்டி விவகாரம் 3 மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக, உச்சநீதிமன்றத்தால் லோதா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பொறுப்புகளில் இருந்து நீக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கடந்த 3ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மாநில கிரிக்கெட் சங்கங்களில் 9 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த நிர்வாகிகளை தகுதி நீக்கம் செய்தது. இதனால் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பதவியை இழந்தனர்.

சிலர் ராஜினாமா செய்தனர்.

இதனிடையே ஜனவரி 3ம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக வழிகாட்டுதல்கள் கேட்டு ஐதராபாத், கோவா, மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளன.

.

மூலக்கதை