பாகுபலிக்கு முந்தைய கதை புத்தகமாகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகுபலிக்கு முந்தைய கதை புத்தகமாகிறது

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்ற முதல்பாக கதைக்கு விடை சொல்லும் படமாக பாகுபலி 2ம் பாகம் இயக்கி வருகிறார் ராஜமவுலி. தற்போது பாகுபலிக்கு முன்பான கதைகள் 3 புத்தகங்களாக வெளியிடப்படுகிறது.

இதில் முதல் புத்தகம் ‘தி ரைஸ் ஆப் சிவகாமி’ என பெயரிடப்பட்டுள்ளது. பாகுபலி கதைக்கு முன்பாக நடந்த சம்பவங்களை இப்புத்தகம் விவரிக்கிறது.

இதையடுத்து வெளியாகவுள்ள 2 புத்தகங்களில் ஒரு புத்தகம் கட்டப்பாவின் சரித்திரத்தை சொல்வதாக எழுதப்படுகிறது. ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்புத்தகம் வெளியாகவுள்ளது.

கொச்சியை சேர்ந்த ஆனந்த நீலகண்டன் எழுதுகிறார்.

இந்நிலையில் பாகுபலி 2ம் பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.


.

மூலக்கதை