அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டம்- இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு- பதற்றம் நீடிப்பு!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டம் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு பதற்றம் நீடிப்பு!!

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 5 மணிநேரமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் வெளிமாவட்ட இளைஞர்களும் பெண்களும் ஏராளமாக பங்கேற்றுள்ளனர்.

உச்சநீதிமன்ற தடையால் அலங்காநல்லூரில் 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அலங்காநல்லூரியில் கோயில் காளைகளுக்கு பூஜைகள் மட்டும் நடத்த போலீசார் அனுமதித்தனர்.

இருந்தபோதும் வாடிவாசல் வழியே கோயில்களை அழைத்து செல்ல அப்பகுதி மக்கள் முயற்சித்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர். இவர்களுடன் அலங்காநல்லூர் பொதுமக்களும் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 5 மணிநேரமாக வாடிவாசல் அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் போராடி வருகின்றனர். இவர்களை வெளியேற போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியும் கூட இளைஞர்கள் கலைந்து செல்லவில்லை.

5 மணிநேரமாக உணவு, குடிநீர் இன்றி தொடர்ந்து போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுப்பதால் அலங்காநல்லூர் பதற்றமாக இருந்து வருகிறது.

மூலக்கதை