இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: இந்திய அணி 3 விக்கெட்டுகள்...

தினத்தந்தி  தினத்தந்தி
இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: இந்திய அணி 3 விக்கெட்டுகள்...

புனே,

இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இந்திய அணி.  அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து விளையாடியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராய் 12 பவுண்டரிகள் அடித்து 73 ரன்கள் அடித்தார்.  இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு 351 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

கோலி, ஜாதவ் சதம்

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி வோக்ஸ் வீசிய பந்தினை சிக்சருக்கு விளாசினார்.  இதனால் (93 பந்துகள், 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) 105 ரன்களை எடுத்து சதம் கடந்துள்ளார்.  அவருடன் இணைந்து ஆடிய கேதர் ஜாதவ் வோக்ஸ் வீசிய பந்தினை பவுண்டரிக்கு அடித்து 101 (66 பந்துகள், 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) சதம் அடித்துள்ளார்.

இந்திய அணியின் பாண்ட்யா 40 ரன்களுடனும், அஸ்வின் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்திய அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை