பிரேசில் சிறையில் கலவரம்: 10 கைதிகள் தலை துண்டிப்பு

தினமலர்  தினமலர்
பிரேசில் சிறையில் கலவரம்: 10 கைதிகள் தலை துண்டிப்பு

ரியோ டி ஜெனிரோ : பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.

பிரேசில் நாட்டின் வட கிழக்கு நகரமான நடாலில் அல்காகஷ் என்ற மிகப்பெரிய சிறைச் சாலை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு கலவரம் மூண்டது.தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், போலீசாரும் விரைந்து சென்று கலவரத்தை அடக்கினர். அதில் 10 கைதிகள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். கைதிகள் யாரும் தப்பி ஓடவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால் சிறைக்குள் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் வெடி குண்டு சத்தம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மூலக்கதை