ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து 12 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து 12 பேர் பலி

புவனேஷ்வர்: ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஓடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் குலேரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் இது வரை 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகாடா ரயில் நிலையத்தில் இருந்து மீ்ட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். மொத்த சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை