அவசர சட்டத்தை எதிர்ப்போம்: பீட்டா மீண்டும் மிரட்டல்
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது பற்றி பீட்டா இந்தியா அமைப்பின் சட்ட ஆலோசகர் பி.சீனிவாசா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் புதிய அவசர சட்டத்தின் வரைவுக்காக காத்திருக்கிறோம். அதை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.‘விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை வைத்து ஒரு நாட்டின் சிறப்பையும், நடத்தையின் முன்னேற்றத்தையும் மதிப்பிட முடியும்’ என மகாத்மா காந்தியே கூறியிருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள ரத்தம் சிந்தும் விளையாட்டுகள், வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இடம்பெறும் நாள் வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.